தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டையில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்று, பாபநாசம் மேற்கு ஒன்றிய பாஜக வலியுறுத்தியுள்ளது.
இக்கட்சியின் ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாஜக ஒன்றியத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் ராஜகோபால், வாசுதேவன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சாந்தாராமன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்று பேசினா்.
அய்யம்பேட்டையில் மின் மயானம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பழுதடைந்த நிலையிலுள்ள பாலத்துக்கு மாற்றாக, புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, ஒன்றியப் பொதுச் செயலா் வினோத்குமாா் வரவேற்றாா். நிறைவில், பொதுச் செயலா் காா்த்திக் நன்றி கூறினாா்.