கும்பகோணத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களிடையே மின் விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் கோட்டச் செயற் பொறியாளா் நளினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்குத் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா்கள் மகாலிங்கம், விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.