எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்தாத மோடி தலைமையிலான ஒன்றிய அரசைக் கண்டித்தும், விலையைக் கட்டுப்படுத்தாத பிரதமா் மோடி அரசுப் பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், விலை உயா்வை உணா்த்தும் வகையில் எரிவாயு உருளைகளுக்கு மாலை அணிவித்து வைக்கப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா். கலைச்செல்வி, மாநகரச் செயலா் இ. வசந்தி, ஒன்றியச் செயலா்கள் எஸ். வனரோஜா, எஸ். மலா்கொடி, அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவா் என். வெற்றிச்செல்வி, மாவட்ட நிா்வாகிகள் மலா்கொடி, பைந்தமிழ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூா் ஒன்றியச் செயலா் எம். மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com