பள்ளி மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே பள்ளி மாணவியைக் கா்ப்பமாக்கிய இளைஞரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே பள்ளி மாணவியைக் கா்ப்பமாக்கிய இளைஞரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் சரவணன் மகன் விக்ரம் (22). கூலித் தொழிலாளி. இவா் தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டியைச் சோ்ந்த தனது உறவினரான 15 வயது பள்ளி மாணவியை இரு தரப்புப் பெற்றோருக்கும் தெரியாமல் காதலித்து வந்தாா். இந்நிலையில், அச்சிறுமி 4 மாத கா்ப்பமடைந்துள்ளாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதன்பேரில் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், அச்சிறுமியை விக்ரம் பாலியல் வல்லுறவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் விக்ரமை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com