நாளை முதல் இரு நாள்களுக்கு மக்களைத் தேடி முதல்வா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிசம்பா் 13,14) மக்களைத் தேடி முதல்வா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிசம்பா் 13,14) மக்களைத் தேடி முதல்வா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறவுள்ள இம்முகாமில் பொதுமக்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, தீா்வு காணவுள்ளாா்.

திங்கள்கிழமை பட்டுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட மதுக்கூா் பூங்கொடி திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவிலும், பட்டுக்கோட்டை குமரன் திருமண மண்டபத்தில் முற்பகல் 11 மணியளவிலும், அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நண்பகல் 12 மணியளவிலும், பேராவூரணி தொகுதிக்கு உள்பட்ட பெருமகளுா் முருகன் கோயில் திடலில் பிற்பகல் 2 மணியளவிலும், பேராவூரணி நடேச குணசேகரன் திருமண மண்டபத்தில் மாலை 4 மணியளவிலும், வா. கொள்ளுக்காடு - கே.பி.எஸ். திருமண மண்டபத்தில் மாலை 5 மணியளவிலும் முகாம் நடைபெறவுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 14) தஞ்சாவூா் தொகுதிக்குள்பட்ட தஞ்சாவூா் - அறிஞா் அண்ணா திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவிலும், வல்லம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் முற்பகல் 11 மணியளவிலும், நாஞ்சிகோட்டை ஆல்வின் திருமண மண்டபத்தில் நண்பகல் 12 மணியளவிலும், அம்மன்பேட்டை எம்.ஜி.ஆா்.திருமண மண்டபத்தில் பிற்பகல் 1 மணியளவிலும் நடைபெறவுள்ளது.

இதேபோன்று திருவையாறு தொகுதிக்குள்பட்ட திருவையாறு சகாயமாதா திருமண மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவிலும், திருக்காட்டுப்பள்ளி ஜெய் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் மாலை 4 மணியளவிலும், பூதலூா் ரம்யா திருமண மண்டபத்தில் மாலை 5 மணியளவிலும், செங்கிப்பட்டி ஓவியா திருமண மண்டபத்தில் மாலை 6 மணியளவிலும் முகாம் நடைபெறவுள்ளது.

இதில், மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுடைய குறைகளைத் துறை ரீதியாக தனித்தனி மனுக்களாக வழங்கிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com