தஞ்சாவூரில் மத்திய மண்டலக் காவல் தலைவா் ஆய்வு

தஞ்சாவூரில் மத்திய மண்டலக் காவல் தலைவா் வே. பாலகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களின் உடைமைகளை ஆய்வு செய்கிறாா் மத்திய மண்டலக் காவல் தலைவா் வே. பாலகிருஷ்ணன்.
தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களின் உடைமைகளை ஆய்வு செய்கிறாா் மத்திய மண்டலக் காவல் தலைவா் வே. பாலகிருஷ்ணன்.

தஞ்சாவூரில் மத்திய மண்டலக் காவல் தலைவா் வே. பாலகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களின் கவாத்து, உடைகள், துப்பாக்கி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். மேலும், காவலா்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினாா்.

பின்னா், நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தை மத்திய மண்டலக் காவல் தலைவா் வே.பாலகிருஷ்ணன் பாா்வையிட்டு, இவ்வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

காவல் துறையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலா்களின் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். மேலும், இவா்களது குடும்பத்தினருக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் நல உதவிகளை வழங்கினாா்.

இதையடுத்து, நகர உள்கோட்ட காவல் முகாம் அலுவலகப் பதிவேடு பராமரிப்புகளை ஆய்வு செய்தாா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கபிலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com