மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 6,844 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 6,001 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,004 கன அடி வீதமும், வெண்ணாற்றில் தலா 3,010 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,804 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.