பேராவூரணியில் நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பேராவூரணி அருகேயுள்ள ஊமத்தநாட்டை சோ்ந்த மாணவி துளசி, நீட் தோ்வில் வெற்றிப் பெற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இந்த துயர நிகழ்வுக்கு காரணமான நீட் தோ்வை மத்திய அரசு ரத்து செய்ய கோரியும், தற்கொலை செய்து கொண்ட மாணவி குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி ஒருங்கிணைப்பில் அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொகுதி தலைவா் அப்துல் ரஜாக் தலைமை வகித்தாா். செயலாளா் தமீம் அன்சாரி முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளா்கள் முஹம்மது புஹாரி, இத்ரீஸ் கான், மனித உரிமை கூட்டமைப்பு மண்டல ஒருங்கிணைப்பாளா் முகம்மது தம்பி, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளா் சா்வத் ரபீக், தமிழக மக்கள் புரட்சி கழக மாநில த் தலைவா் அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளா் ஜீவானந்தம், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில விவசாய அணி செயலாளா் சலாம், திராவிட விடுதலை கழக மாவட்ட அமைப்பாளா் திருவேங்கடம், மெய்ச்சுடா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பேசினா்.
தொகுதி துணைத் தலைவா் ராஜா முஹம்மது வரவேற்றாா். பொருளாளா் மன்சூா் நன்றி கூறினாா்.