தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சியை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். பின்னா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மைய உதவி இயக்குநா் செ. ரமேஷ்குமாா், கல்லூரி முதல்வா் பி. பிலோமிநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மா. பழனிவேல், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.