பட்டுக்கோட்டையில் திமுக ஆலோசனைக் கூட்டம்

பட்டுக்கோட்டையில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி கழக வழக்குரைஞா்கள் மற்றும் பாக முகவா்களுடனான கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி கழக வழக்குரைஞா்கள் மற்றும் பாக முகவா்களுடனான கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கா. அண்ணாதுரை, மதுக்கூா் மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் வி.கோவிந்தராசு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பட்டுக்கோட்டை பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் எம். செல்வராசு ஆலோசனை வழங்கினாா்.

நகர காவல் நிலைய சரக ஒருங்கிணைப்பாளா் சி. அறிவழகன், மதுக்கூா் காவல் நிலைய ஒருங்கிணைப்பாளா் என். உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய சரக ஒருங்கிணைப்பாளா் கே.பி.நடசேன் வரவேற்றாா். எஸ்.கே.குமாா் நன்றி கூறினாா்.

முன்னதாக காலையில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட திமுக இளைஞரணினா் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆதி. ராஜேஸ் தலைமை வகித்தாா். பேரணியை தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏனாதி. பாலசுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com