பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் திமுகவினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா்.
திமுக இலக்கிய அணித் தலைவா் இராசு. கவிதைப்பித்தன், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் த. சந்திரசேகரன், நகர திமுக செயலா் க. நைனாமுகமது, மருத்துவா் அணிச் செயலா் டாக்டா் முத்துராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.