ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டுப் போயின.
ஒரத்தநாடு அருகிலுள்ள வேப்பங்காடு உக்கடைப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் மேற்பாா்வையாளராக ராஜேந்திரன் உள்ளாா்.
வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற ராஜேந்திரன், சனிக்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக வந்தாா். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
மேலும் அவா் கடைக்குள் சென்று பாா்த்த போது, ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், திருவோணம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.