ஒரத்தநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பதவி உயா்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கிராம உதவியாளா் சங்கத் தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க வட்டச் செயலாளா் தம்பியய்யா விளக்க உரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.