தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பாவை விழா போட்டிகள் ஜன. 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திங்களூா் கைலாசநாதா் சுவாமி கோயில் செயல் அலுவலா் பழனிவேல் தெரிவித்திருப்பது:
இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா் மண்டலம் சாா்பில் தஞ்சாவூா் மாவட்டப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாவை விழா போட்டிகள் தஞ்சாவூா் மேல வீதியிலுள்ள பங்காரு காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடுதல், கட்டுரை எழுதுதல் போட்டி ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வரை, ஆறாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி ஆசிரியா்கள் மூலம் வருகையைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 9942478299, 9944415585, 7373622817, 9384407587 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.