மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 105.04 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 2,542 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 2,250 கன அடி வீதம், கல்லணைக் கால்வாயில் 501 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.