பட்டுக்கோட்டையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து இரவு, பகலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையாலும் திங்கள்கிழமை அதிகாலை முதல் இடைவிடாது பெய்த மழையாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனா்.