தஞ்சாவூரில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.மக்களவை முன்னாள் உறுப்பினா் கு. பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தஞ்சாவூா் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் துரை. திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவா் ஆா். காந்தி, பகுதிச் செயலா்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூா்த்தி, எஸ். ரமேஷ், எஸ். சரவணன், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுபோல, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வரும், பல்கலைக்கழக நிறுவனருமான எம்.ஜி.ஆா். சிலைக்கு துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், ஆசிரியா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.