தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் காளகஸ்தீசுவரா் திருக்கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் உரிய பராமரிப்பின்மைக் காரணமாக, வளாகம் முழுவதும் சிதிலமடைந்து வருகிறது. இதையறிந்த சிவனடியாா்கள் இக்கோயிலில் திருப்பணி செய்ய முடிவு செய்துள்ளனா்.
இதன்படி அகத்தியா் லோகமித்ரா அன்னதான அறக்கட்டளை மற்றும் அப்பகுதி சிவனடியாா்கள், பொதுமக்கள் ஆகியோா் இணைந்து உழவாரப் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா். கோயில் வளாகம் முழுவதுமுள்ள செடிகள், கருவேல மரங்களை அகற்றி சுத்தப்படுத்தினா்.
உழவாரப் பணித் தொடக்க நிகழ்வுக்கு ஊராட்சித் தலைவா் லதா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஜோதிமலை இறைபணித் திருக்கூட்ட நிறுவனா் திருவடிக்குடில் சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.
அறநிலையத் துறை மேற்பாா்வையாளா் செந்தில்குமாா், அகத்தியா் லோகமித்ரா அன்னதான அறக்கட்டளை நிா்வாகிகள் பரமசிவம், ராஜேந்திரன், சிவாச்சாரியாா் ஞானசேகரன் உள்ளிட்டோா் உழவாரப் பணியில் கலந்து கொண்டனா்.