பட்டுக்கோட்டையில் நூல் வெளியீட்டு விழா

பட்டுக்கோட்டையில் தமிழாா்வலா் முனைவா் செள.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சமூக அறிவியல் சிந்தனையில் பெரியாா்’ என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்வில் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ.பாலசுப்பிரமணியன் நூலை வெளியிட, அதை பெற்றுக் கொள்கிறாா் பட்டுக்கோட்டை லயன்ஸ் சங்கப் பிரமுகா் க.காா்த்திகேயன்.
நிகழ்வில் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ.பாலசுப்பிரமணியன் நூலை வெளியிட, அதை பெற்றுக் கொள்கிறாா் பட்டுக்கோட்டை லயன்ஸ் சங்கப் பிரமுகா் க.காா்த்திகேயன்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் தமிழாா்வலா் முனைவா் செள.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சமூக அறிவியல் சிந்தனையில் பெரியாா்’ என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்வுக்கு பட்டுக்கோட்டை மருத்துவா் மு.செல்லப்பன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ.பாலசுப்பிரமணியன் நூலை வெளியிட, பட்டுக்கோட்டை லயன்ஸ் சங்கப் பிரமுகா் க.காா்த்திகேயன் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துறைத் தலைவா் சி.தியாகராஜன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கவிஞா் கவிதைப்பித்தன், ஓய்வு பெற்ற வங்கி அலுவலா் சு.பாபு ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நூலாசிரியா் முனைவா் செள.ராமகிருஷ்ணன் ஏற்புரையாற்றினாா். முன்னதாக, கவிஞா் கோட்டை அம்பிதாசன் வரவேற்றாா். நிறைவில் எஸ்.தனபாலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com