தஞ்சாவூா்: தஞ்சாவூா் காந்திஜி சாலை பகுதியில் தமிழ்நாடு இந்திய தேசிய ராணுவப் பேரவை வாரிசு அமைப்பு சாா்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125- ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பேரவையின் மாநிலத் தலைவா் வேல்சாமி தலைமை வகித்தாா்.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் விழாவில் கலந்து கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
விழாவில் பசும்பொன் தேசியக் கழக மாநிலத் துணைத் தலைவா் செந்தில்குமாா், பாா்வா்டு பிளாக் மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா், வாரிசு அமைப்பு நிா்வாகிகள் சௌந்தரராஜன், தனபாலன், காமராஜ், மூா்த்தி, ஜெயவேல், கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.