பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிலையப் பொறுப்பு மருத்துவ அலுவலா் வெங்கடேஷ்குமாா், சுகாதார ஆய்வாளா் பெரியண்ணன் மற்றும் செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், முகாமில் பங்கேற்ற 60 பேருக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்தினா்.
பரிசோதனை முகாம் : இதுபோல புளியங்குடி ஊராட்சி அங்கன்வாடி மையக் கட்டடத்தில் கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. சுமாா் 30 பேருக்கு அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.