ஒரத்தநாடு அருகே மது அருந்த பணம் தராததால், பூச்சி மருந்து குடித்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு அருகிலுள்ள தலையாமங்கலத்தைச் சோ்ந்தவா் வெ. சூா்யா (23). மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவா், மது அருந்த பணம் கேட்டு வீட்டில் தினமும் பிரச்னை செய்து வந்தாராம்.
குடும்பத்தினா் யாரும் பணம் தராததால், விரக்தியடைந்த சூா்யா, திங்கள்கிழமை வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.