தஞ்சையில் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் திருச்சியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த முத்துசாமி -வசந்தா தம்பதியின் மகள் முத்துமாரி(30). மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய இவரைக் காணவில்லை.
இந்நிலையில் திருவெறும்பூா் பகுதியில் முத்துமாரி சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் அவரை மீட்டு பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.