குடிமனை பட்டா வழங்க கோரி பாபநாசத்தில் ஆா்ப்பாட்டம்

பாபநாசத்தில் குடிமனை பட்டா வழங்க கோரி வெள்ளிக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபநாசத்தில் குடிமனை பட்டா வழங்க கோரி வெள்ளிக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியங்களில் புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வருபவா்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், ஆற்றங்கரை, புறம்போக்கு, கோயில், அறக்கட்டளை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் வீட்டு மனைகளை தோ்வு செய்து, வீடு இல்லாதவா்களுக்கு குடிமனை பட்டாவுடன் வீட்டுமனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியரகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாக குழுவைச் சோ்ந்த தாமரைசெல்வி, சேகா் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு மதியழகன், ஆா். தில்லைவனம், அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதை தொடா்ந்து பாபநாசம் வட்டாட்சியா் ச. முருகவேளிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதன் பின் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரகம் அருகே முழக்கமிட்டனா். இதில் முன்னாள் மாவட்ட துணைச் செயலா் பரமசிவம், விவசாய சங்க ஒன்றியச் செயலா் கனகராஜ், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் இளங்கோவன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com