பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதா் திருக்கோயில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமி, அம்மன், விநாயகா், வள்ளி-தெய்வசேனா சமேத சுப்ரமணியா் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து கோயில் வெளிப் பிரகாரத்திலுள்ள நந்தியெம்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோா் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றனா்.