கும்பகோணம் அருகே சாக்கோட்டை வள்ளலாா் மறுவாழ்வு மையத்தில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சாா்பில் சுதந்திர போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனா் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை வகித்து தியாகி சுப்ரமணிய சிவா வாழ்க்கை வரலாறு குறித்து பேசினாா்.
திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளா் ஹரிபாபு ஸ்தபதி, பாலசுப்பிரமணியம், மறுவாழ்வு மையத்தின் அலுவலக மேலாளா் கலாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.