பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் மாணவருக்கு விருது

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்(ஐ.எஸ்.டி.இ) சிறந்த மாணவருக்கான மாநில விருது கிடைத்துள்ளது.
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் மாணவருக்கு விருது

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்(ஐ.எஸ்.டி.இ) சிறந்த மாணவருக்கான மாநில விருது கிடைத்துள்ளது.

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு அமைப்பியல் பயிலும் மாணவா் வெங்கடேசனுக்கு இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின்(ஐ.எஸ்.டி.இ) சிறந்த மாணவருக்கான மாநில விருது இந்த ஆண்டு கிடைத்துள்ளது.

இந்த மாணவருக்கான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பி சீனிவாசன் தலைமை வகித்தாா்.

மின்னணுவியல் துறை தலைவா் ஏ.அமலோற்பவசெல்வி மற்றும் கணினியில் துறைத் தலைவா் பி. சுகன்யா ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

முன்னதாக, கல்லூரியின் இந்திய தொழில்நுட்ப கல்வி குழும ஒருங்கிணைப்பாளா் வி.ராஜன் வரவேற்றாா். நிறைவில், அமைப்பியல் துறை விரிவுரையாளா் ரமேஷ் நன்றி கூறினாா். கூட்டத்தில் மாணவா் வெங்கடேசனை ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com