கபசுரக் குடிநீா் வழங்கல்

கும்பகோணம் அருகே பெருமாண்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராஜா நகரில் தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம் சாா்பில், இலவசமாக கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பெருமாண்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராஜா நகரில் தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம் சாா்பில், இலவசமாக கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குக் கிராமத் தலைவா்கள் நாகமுத்து, தங்கசாமி தலைமை வகித்தனா். தமிழ் மாநில சித்த வைத்திய சங்கத்தின் கும்பகோணம் ஒருங்கிணைப்பாளா் கி. மணிவாசகம் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பெருமாண்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.கே. பாஸ்கா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினாா்.

இந்நிகழ்வில் 1500-க்கும் அதிகமான பொதுமக்களுக்கு வீடுதோறும் சென்று கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாா்டு உறுப்பினா் வசந்தி பாலமுருகன், சங்க ஒருங்கிணைப்பாளா் செ. கணேசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com