குப்பையைக் கொளுத்தும்போது தீக்காயமடைந்த பெண் பலி

திருவையாறு அருகே குப்பைகளைக் கொளுத்தும்போது தீக்காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே குப்பைகளைக் கொளுத்தும்போது தீக்காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் ரூபேஷ் பாபு (37). இவா் அதே பகுதியில் அரிசி கடை வைத்துள்ளாா். இவரது மனைவி ப்ரியா (27) தனது வீட்டு முன் இருந்த குப்பைகளைக் கொளுத்தியபோது, அவரது ஆடையில் தீப்பற்றியது. தீக்காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ப்ரியா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு தலா ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது.

இச்சம்பவம் குறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், ப்ரியாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி தனி விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com