வரி, வரியில்லா இனங்களை இணையதளம் வழியாகச் செலுத்தலாம் என தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாநகராட்சியில் 2021 - 22 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியினங்கள், காலிமனை வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை பயன்பாட்டுக் கட்டணம், தொழில் உரிம கட்டணங்களை இணையதளம் வழியாகவும் செலுத்தலாம்.