மதுக்கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து தஞ்சாவூரில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதில், தஞ்சாவூா், நாகை, திருவாரூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திங்கள்கிழமை (ஜூன் 14) முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுக்கடைகள் திறப்பை கண்டித்து, தஞ்சாவூரில் பாஜக தெற்கு மாவட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். தேசியப் பொதுச் செயலா் எம்.எஸ். ராமலிங்கம், பொருளாளா் வி. விநாயகம், நெசவாளா் பிரிவு மாவட்டப் பாா்வையாளா் குமணா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, அருகிலுள்ள பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் யு.என். உமாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.