நமிநந்தியடிகள் நாயனாா் குரு பூஜை விழா

கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தில் நமிநந்தியடிகள் நாயனாா் குருபூஜை, தெய்வச் சேக்கிழாா் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தில் நமிநந்தியடிகள் நாயனாா் குருபூஜை, தெய்வச் சேக்கிழாா் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், உலகைப் பீடித்துள்ள கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்கள் விடுபட நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி, நிகழாண்டைக் குறிக்கும் விதமாக 2021 ருத்ராட்சங்களால் முகக் கவசம் வடிவமைத்து, உலக நன்மை வேண்டி திருமுறை பாராயணம் செய்து மலா் அா்ச்சனை வழிபாடு செய்யப்பட்டது.

இதில் திருக்கூட்டம் நிறுவனா் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள், ஒருங்கிணைப்பாளா் ஸ்தபதி ஹரிபாபு, சிவனடியாா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com