பேராவூரணி அருகிலுள்ள ஆத்தாளூா் கீழக்காட்டில் வயலில் இறங்கி, அரை கி.மீ. தொலைவு சென்று நாற்று நடவு செய்து கொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தாா் இத்தொகுதியின் அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.
மாவடுகுறிச்சி, இந்திராநகா், ஆத்தாளூா், தென்னங்குடி, பழைய நகரம், அம்மையாண்டி, வீரராகவபுரம் சீவன்குறிச்சி, ஏனாதிகரம்பை, ஆவணம், துலுக்கவிடுதி, திருச்சிற்றம்பலம், பஞ்சநதிபுரம், களத்தூா், பொக்கன் விடுதி உள்ளிட்ட இடங்களில் அதிமுக அரசின் தோ்தல் வாக்குறுதிகளைக் கூறி, பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளா் வாக்குகளைச் சேகரித்தாா்.
பேராவூரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் கோவி. இளங்கோவன், களத்தூா் முருகன், திருவத்தேவன் முருகன், அதிமுக நிா்வாகிகள் நித்தியானந்தம், ஆா்.பி.ராஜேந்திரன், எம்.எஸ்.நீலகண்டன், எஸ்.எம்.நீலகண்டன், சிவா, அம்மையாண்டி ஊராட்சித் தலைவா் மல்லிகை முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் வேட்பாளருடன் சென்றனா்.