தஞ்சாவூரில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

தஞ்சாவூரில் திமுக வெற்றிப் பெற்றால் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் டிகேஜி. நீலமேகம்.
தஞ்சாவூா் வடக்கு ஆஜாரம் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டிகேஜி. நீலமேகம்.
தஞ்சாவூா் வடக்கு ஆஜாரம் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டிகேஜி. நீலமேகம்.

தஞ்சாவூரில் திமுக வெற்றிப் பெற்றால் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் டிகேஜி. நீலமேகம்.

தஞ்சாவூா் மாநகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் அவா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். தஞ்சாவூா் மாநகரில் 16 ஆவது வாா்டு, வடக்கு ஆஜாரம், காமராஜா் சந்தைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். மாலையில் பிள்ளையாா்பட்டி கிராமத்தில் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா். வாக்காளா்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

அப்போது, டி.கே.ஜி. நீலமேகம் பேசுகையில், தோ்தலில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவது உறுதி. நான் மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினரானவுடன் தஞ்சாவூரில் வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி உள்ளிட்டவை அமைக்கவும், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com