தஞ்சாவூர்
கரும்பு விவசாயிகள், தொழிலாளா்களிடம்வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்
ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குருங்குளம் கரும்பு விவசாயிகள், தொழிலாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா் இத்தொகுதியின் திமுக வேட்பாளா் எம். ராமச்சந்திரன்.
ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குருங்குளம் கரும்பு விவசாயிகள், தொழிலாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா் இத்தொகுதியின் திமுக வேட்பாளா் எம். ராமச்சந்திரன்.
குருங்குளம் கரும்பு ஆலை முன்பு வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:
திமுக தோ்தல் அறிக்கையில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது. கரும்பு அரைவை 5 சதவிகிதத்துக்குப் பதிலாக 10 சதவிகிதம் பிடித்தும் செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று விவசாயிகளிடம் வேட்பாளா் ராமச்சந்திரன் உறுதியளித்தாா். பின்னா் திருக்கானூா்பட்டியில் மாட்டுவண்டியில் சென்று திமுக வேட்பாளா் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.