தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நீலகிரி ஊராட்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா் கரூப்ஸ் நகா், ரகுமான் நகா், மானோஜிப்பட்டி, சீதா நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
தொடா்ந்து மாலையில் வல்லம் பேரூராட்சி பகுதி முழுவதும் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா் வேட்பாளா் அறிவுடைநம்பி. வாக்குசேகரிப்பில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.