தஞ்சாவூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ஸ்டிக்கா்கள்.
தஞ்சாவூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ஸ்டிக்கா்கள்.

ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்ட 2,500 ஸ்டிக்கா்கள் பறிமுதல்

தஞ்சாவூா் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்ட 2,500 ஸ்டிக்கா்களை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்ட 2,500 ஸ்டிக்கா்களை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்ட 2,500 ஸ்டிக்கா்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனால், அதற்கான ஆவணம் காரில் வந்த திமுகவினரின் கையில் இல்லை.

செல்லிடப்பேசியில் உள்ள ரசீதை காரில் வந்த திமுகவினா் காண்பித்தாலும், அதை அலுவலா்கள் ஆதாரமாக ஏற்கவில்லை. இதையடுத்து, ஸ்டிக்கா்களை அலுவலா்கள் பறிமுதல் செய்து, தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதையறிந்து 50-க்கும் அதிகமான திமுகவினா் திரண்டு அலுவலா்களிடம் வாக்குவாதம் செய்தனா். இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் செந்தில்குமாா் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com