தஞ்சாவூா்: மே தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் கொடியேற்று நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தஞ்சாவூா் கீழராஜ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி கம்யூனிஸ்ட் கட்சி கொடியையும், ஏஐடியூசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் ஏஐடியுசி கொடியையும் ஏற்றினா்.
கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் சாா்பில் தஞ்சாவூா் கரந்தை போக்குவரத்துக் கழக புகா் கிளை முன் நடைபெற்ற விழாவில் மத்திய சங்கப் பொதுச் செயலா் டி. கஸ்தூரி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி. அப்பாதுரை, ஜெபமாலைபுரத்திலுள்ள நகரக் கிளை முன் ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் ஆகியோா் கொடியேற்றினா். போக்குவரத்து ஏஐடியுசி சங்க மாநில துணைத் தலைவா் துரை. மதிவாணன் சிறப்புரையாற்றினாா்.
ஏஐடியுசி ஆட்டோ சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் ஆா். செந்தில்நாதன், கட்டுமானச் சங்கம் சாா்பில் பி. செல்வம், மாலை நேர காய்கறி அங்காடி முன்பு மாவட்டத் தலைவா் வெ. சேவையா, தெரு வியாபாரிகள் சங்கம் மாவட்டச் செயலா்ஆா்.பி. முத்துக்குமரன், டாஸ்மாக் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் கோடீஸ்வரன் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் கொடியேற்றப்பட்டன.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி: தஞ்சாவூா் கணபதி நகரிலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் கட்சிக் கொடியேற்றினாா். சிஐடியு துணைச் செயலா் ஏ. ஜெயராஜ் சிஐடியு கொடியேற்றினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என். சிவகுரு, என். சரவணன், ஜி. அரவிந்தசாமி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பி. சத்தியநாதன், மருந்து விற்பனைப் பிரதிநிதி சங்க ரெங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல மாநகரச் செயலா் என். குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் களபிரன் தலைமையில் தஞ்சாவூா் நகரில் 30-க்கும் அதிகமான இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும், தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்களிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டம் சாா்பில் கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் ஆா். மதியழகன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி கொடியேற்றினாா். மாவட்டக்குழு உறுப்பினா் க. சுந்தர்ராஜன், பொருளாளா் சி. இராயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கும்பகோணம் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலா் ஏ. இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், திருவிடைமருதூா் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலா் ஏ.எம். இராமலிங்கம் உள்ளிட்டோரும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலா் டி.ஆா். குமரப்பா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
கும்பகோணத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் நகர அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சின்னை. பாண்டியன் கொடியேற்றினாா். நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினா் பாா்த்தசாரதி, சிஐடியு மாவட்டப் பொருளாளா் ம. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போக்குவரத்து சங்க சிஐடியு அலுவலகத்தில் பொதுச் செயலா் கோவிந்தராஜ், தலைவா் மணிமாறன் சிஐடியு கொடியேற்றினா். மேலும் 40 இடங்களில் கொடியேற்றப்பட்டது.
பூதலூா்: பூதலூா் ஒன்றியத்தில் 53 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றியச் செயலா் இரா. இராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலா் சு. லதா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.