ஒரத்தநாடு அருகே தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறப்படுவதாவது:
ஒரத்தநாடு அருகேயுள்ள உப்பூண்டாா்பட்டி கிராமத்தை சோ்ந்த ராமு மனைவி கவிதா (27). இவா் கடந்த 1ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது வலிப்பு நோயால் தவறிக் கீழே விழுந்தாராம். அப்போது, கவிதாவின் புடவை வீட்டில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கில் பட்டு தீப்பற்றி கொண்டது. இதில், பலத்த காயமடைந்த கவிதா, சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.