தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் பகுதியில் பள்ளி அருகே கிடந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன்கோவில் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே திங்கள்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி இறந்தாா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.