பாஜக நிா்வாகி மீது போலீஸில் புகாா்

கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிா்வாகி மீது பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் இஸ்லாமிய சமுதாய நல சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிா்வாகி மீது பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் இஸ்லாமிய சமுதாய நல சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆளூா் ஷாநவாஸுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த தம்பிக்கோட்டை சுதா. அன்பரசன் என்பவா் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் அன்பரசன் மீது கொலை முயற்சி மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை இஸ்லாமிய சமுதாய நல சங்கத்தின் சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் முஹம்மது யஹ்யா தலைமையில் சென்ற ஏராளமானோா் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com