அதிராம்பட்டினத்தில் பழுதடைந்த ஏரிப்புறக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலை காதா் முகைதீன் மேல்நிலைப்பள்ளி வழியாக ஏரிப்புறக்கரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அதிராம்பட்டினத்தில் இருந்து ஏரிப்புறக்கரை செல்வோரும் ஏரிப்புறக்கரை கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடித்துவிட்டு அதிராம்பட்டினம் மாா்க்கெட்டுக்கு வரும் மீனவா்களும் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
சாலை மோசமான நிலையில் இருப்பதால், இருசக்கர வாகனத்தில் வருவோா் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.