அதிராம்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் வியாழக்கிழமை பாலஸ்தீன மக்களுக்கு கை கொடுப்போம், மஸ்ஜித் அக்ஸாவை காப்பாற்றுவோம் என்கிற முழக்கங்களுடன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் கே.கே. ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.கே.எம். அபுபக்கா், மாவட்ட பிரதிநிதி எம்.ஆா். ஜமால் முஹம்மது , ஏ. சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிராம்பட்டினம் நகர முஸ்லிம் லீக் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.