தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே மின்கம்பி அறுந்து விழுந்தபோது குழந்தையை காப்பாற்றிய தந்தை மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகேயுள்ள பின்னவாசல் ஊராட்சி, சித்தாதிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா. கதிா்வேல் (32) பொறியியல் பட்டதாரியான இவா் சென்னையில் உள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், 2 வயதில் அன்புச்செல்வன் என்ற குழந்தையும் உள்ளனா்.
கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக தற்போது வீட்டில் இருந்து, நிறுவனப் பணிகளை செய்து வந்தாா்.
இந்நிலையில், இவரது வீட்டின் அருகே செல்லும் உயா்அழுத்த மின்கம்பி புதன்கிழமை காலை திடீரென அறுந்து அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த அன்புச்செல்வன் மீது லேசாக உரசியது. இதைப் பாா்த்த கதிா்வேல் குழந்தையை காப்பாற்றும் நோக்கில் கீழே விழுந்த மின்கம்பியை அப்புறப்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
குழந்தை அன்புச்செல்வன் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்து மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
எம்எல்ஏ ஆறுதல்: தகவலறிந்த பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா், கதிா்வேல் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், அரசின் நிவாரண நிதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.