கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதி கோணுளாம்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தைத் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:
மாவட்டத்தின் கடைகோடி பகுதியான பந்தநல்லூா், திருப்பனந்தாள் பகுதியில் உள்ளவா்கள் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூருக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அந்தச் சிரமங்களை போக்க ஏதுவாக கோணுளாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே 30 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளித்த முதல்வா், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சா், துணை நின்ற மருத்துவா்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேவைப்பட்டால் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என்றாா் தலைமைக் கொறடா.
அப்போது, ஒன்றியக் குழுத் தலைவா் தேவி ரவிச்சந்திரன், துணைத் தலைவா் கோ.க. அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.