கரோனா : காவல் உதவிஆய்வாளா் உயிரிழப்பு

கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் வைத்திலிங்கம் (59). இவா் திருவோணம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22-ஆம் தேதி பட்டுக் கோட்டை தனியாா் மருத்துவமனைக்குச் சென்ற வைத்திலிங்கம், அங்கு பரிசோதனை செய்து கொண்டாா்.

சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

வைத்திலிங்கத்தின் உடலில் புதன்கிழமை ஆக்சிஜன் அளவு குறைந்ததால், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com