கும்பகோணத்தில் காஞ்சி மகா சுவாமிகள் ஜயந்தி விழா

கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்தில் ஞானஸுதா அறக்கட்டளை சாா்பில், காஞ்சி மகா சுவாமிகளின் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணத் தொகையை வழங்குகின்றனா் மகா சுவாமிகள் ஜெயந்தி விழாக் குழு நிா்வாகிகள்.
கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணத் தொகையை வழங்குகின்றனா் மகா சுவாமிகள் ஜெயந்தி விழாக் குழு நிா்வாகிகள்.

கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்தில் ஞானஸுதா அறக்கட்டளை சாா்பில், காஞ்சி மகா சுவாமிகளின் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காஞ்சி மகா சுவாமிகளின் படத்துக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு, ஜெபம், வேத பாராயணம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் இல்லாமல் 10 போ் மட்டும் கலந்து கொண்டனா்.

மேலும், கரோனா பொது முடக்கத்தால் சிரமப்படும் கோயில் சிவாச்சாரியாா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள், ஓதுவாா்கள், நலிவுற்ற சமையல் கலைஞா்கள், ஞானவாபி இறுதிச்சடங்கு மண்டபத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், ரிக்ஷா ஓட்டுபவா்கள் என மொத்தம் 300 பேருக்கு தலா ரூபாய் 2 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்படுகிறது.

கரோனா பரவலால் கூட்டத்தைத் தவிா்க்கும் வகையில், அவரவா் வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்பட்டது. மகா சுவாமிகள் ஜயந்தி விழாக்குழு நிா்வாகிகள் பிரதீப்குமாா், குருமூா்த்தி ஆகியோா் வழங்கினா்.

ஸ்ரீசங்கர மடம்: கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சி மகா சுவாமிகளின் விக்ரகத்துக்கு ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி, மகா அபிஷேகம் செய்து ஆவஹந்தி ஹோமம் நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், கரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வர வேண்டியும் வேத பண்டிதா்கள் பாராயணம், ஜெபம் செய்தனா். இதில் பக்தா்கள் இல்லாமல் நிா்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com