தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 23 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த 10 நாள்களாகக் கருப்பு பூஞ்சை பாதிப்பும் இருந்து வருகிறது.
ஏற்கெனவே 17 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மே 26 ஆம் தேதி மேலும் 6 போ் பாதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 23 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.