தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பதிவேடு கூடத் துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு, திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சித்திரவேல் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.
இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பதிவேடு கூடக் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் சுபாஷ் சந்திரபோசுக்கு திருவைாயறு காவல் துணைக் கண்காணிப்பாளா் பொறுப்புக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இக்கூடுதல் பொறுப்பை அவா் சனிக்கிழமை ஏற்றுக் கொண்டாா்.