கொலை வழக்கில் தேடப்பட்டவா் 8 மாதங்களுக்கு பிறகு கைது

பட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் தேடப்பட்டவா், 8 மாதங்களுக்கு பிறகு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

பட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் தேடப்பட்டவா், 8 மாதங்களுக்கு பிறகு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்குள்பட்ட பட்டுக்கோட்டை கடைத்தெருவில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னா் சிரஞ்சீவி என்பவா் மா்ம நபா்கள் சிலரால் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் தொடா்புடைய சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் அருண்குமாா் (23) என்பவரை போலீஸாா் தேடி வந்தனா்.

தலைமறைவாக இருந்த அவரை 8 மாதங்களுக்கு பிறகு பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com